மாட்டுப்பண்ணையில் திடீரென பற்றிய தீ.. 30 மாடுகள், 2 கன்றுக்குட்டிகள் பரிதாப உயிரிழப்பு!

 

மாட்டுப்பண்ணையில் திடீரென பற்றிய தீ.. 30 மாடுகள், 2 கன்றுக்குட்டிகள் பரிதாப உயிரிழப்பு!

இவர் சொந்தமாக ஒரு மாட்டுப் பண்ணை வைத்துள்ளார். அதில் 53 மாடுகளும் 100க்கும் மேற்பட்ட ஆடுகளும் இருக்கின்றன.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியபட்டி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் மனோகரன். இவர் சொந்தமாக ஒரு மாட்டுப் பண்ணை வைத்துள்ளார். அதில் 53 மாடுகளும் 100க்கும் மேற்பட்ட ஆடுகளும் இருக்கின்றன. பசு மாடுகளில் பால் கறந்து, அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார் மனோகரன். இந்த பண்ணையில் நேற்று காலை மின் உராய்வின் காரணமாக தீ பற்றியுள்ளது. ஆனால், அப்போது பண்ணை அருகே ஆட்கள் யாரும் இல்லாததால் தீ பரவியதை யாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் மாடுகளை அவிழ்த்து விட்டுத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குள்ளேயே தீ வேகமாகப் பரவியுள்ளது. 

tt

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து, எஞ்சியிருந்த ஆடு மாடுகளை மீட்டுள்ளனர். இந்த தீ விபத்தில்  30 மாடுகள், 2 கன்றுக்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. மேலும், 10 மாடுகளுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 30 மாடுகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.