மாடுபிடி வீரரை சுழற்றி அடித்த காளை…மிரள வைக்கும் வீடியோ!

 

மாடுபிடி வீரரை சுழற்றி அடித்த காளை…மிரள வைக்கும் வீடியோ!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  உறுதிமொழியுடன் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கமாகும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் உலக புகழ் பெற்றவை.

ttn

அந்த வகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு,  பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள்  கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இன்று உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  தொடங்கி நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  உறுதிமொழியுடன் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.

ttn

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் அது குறித்த தகவல்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதன்படி மாடு பிடிக்க முயற்சித்த வீரர் ஒருவரை காளை ஒன்று தூக்கி அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீறிப்பாயும் அந்த காளையின்  வீடியோவை கண்ட பலரும் இதுதாண்டா எங்க ஜல்லிக்கட்டு என்று பெருமையுடன் கூறி வருகிறார்கள்.