மாடியிலிருந்து விழுந்து ஏர் இந்தியா பெண் ஊழியர் மரணம்… தற்கொலையா?

 

மாடியிலிருந்து விழுந்து ஏர் இந்தியா பெண் ஊழியர் மரணம்… தற்கொலையா?

ஐதராபாத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றிவந்த பெண் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றிவந்த பெண் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச விமானநிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அலுவலராக பணியாற்றி வந்தவர் சிம்ரன் (22). இவர் சம்சதாபாத் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் வசித்துவந்தார்.

simran

சம்பவத்தன்று மாடியிலிருந்து சிம்ரன் தரையில் தலைகீழாக விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் விரைந்துவந்து பார்ப்பதற்குள்ளாகத் துடிதுடித்து சிம்ரன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

hospital

சிம்ரன் மூன்றாவது மாடியிலிருந்து எப்படி விழுந்தார் என்று போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்டாரா, அதுபற்றி ஏதும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்று போலீசார் தேடினர். அப்படி எதுவும் கிடைத்ததாக தகவல் இல்லை. எனவே, தவறி விழுந்தாரா அல்லது கொலையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 22 வயதான இளம் பெண் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.