“மாசம் ஒரு லட்சம் சம்பளம்  இவருக்கு  பத்தலையாம்”-  குறைந்த வருமானத்தால் குடும்பத்தை கொலை செய்த இன்ஜினீயர்  தற்கொலை..

 

“மாசம் ஒரு லட்சம் சம்பளம்  இவருக்கு  பத்தலையாம்”-  குறைந்த வருமானத்தால் குடும்பத்தை கொலை செய்த இன்ஜினீயர்  தற்கொலை..

பிறகு இறந்து கிடந்த  நான்கு பேர்களின் சடலங்கள் அவர்களது வீட்டின் படுக்கையறையிலிருந்து   மீட்கப்பட்டுள்ளன.அந்த என்ஜினீயர் தான்  தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 40 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் வருமானம் போறாததால்  தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும்  தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் எல்.பி.நகரில் உள்ள ஹஸ்தினாபுரத்தில் இருக்கும் அவரின் வீட்டில் நடந்தது. பிறகு இறந்து கிடந்த  நான்கு பேர்களின் சடலங்கள் அவர்களது வீட்டின் படுக்கையறையிலிருந்து   மீட்கப்பட்டுள்ளன.அந்த என்ஜினீயர் தான்  தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளார்.சனிக்கிழமை முதல் குடும்பத்தினர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பதால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தபிறகு  இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. 

representative image

ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து இறந்த என்ஜினியர் பெயர்  பிரதீப், அவரது மனைவி சுவாதி (35) மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் கல்யாண் கிருஷ்ணா (6) மற்றும் ஜெய கிருஷ்ணா (2) என்று விசாரணையில் தெரிந்தது .இந்த கொலை-தற்கொலைக்கு  நிதி சிக்கல்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் சடலங்களை  உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணையைத் தொடங்கினர்.