மாசத்துல ஒருநாள் ஆபிஸுக்கு வரும் ஊராட்சி மன்ற செயலாளர்…பொதுமக்கள் தர்ணா போராட்டம்!
சில சான்றுகள் பெற முடியாமல் தவித்து வருவதாகவும், அரசு தரும் சலுகைகள் குறித்து தெரிவிப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டி ஊராட்சி மன்ற செயலாளராக சுப்புலட்சுமி இருப்பவர் சுப்புலட்சுமி.
இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்ற லஞ்சம் கேட்பதாகவும், அலுவலகத்திற்கு மாதம் ஒருமுறை மட்டுமே வருவதாகவும் இதனால் ஊராட்சி மன்றத்தில் சில சான்றுகள் பெற முடியாமல் தவித்து வருவதாகவும், அரசு தரும் சலுகைகள் குறித்து தெரிவிப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இதையடுத்து ஊராட்சி மன்ற செயலாளர் உடனடியாக பணி இடமாற்றம் செய்ய வலியுறுத்திக் கடந்த 26ந்தேதி கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மக்கள் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.