மழையோடு கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்… கடலோர மாவட்ட மக்களுக்கு வெதர்மேன் வாழ்த்து!

 

மழையோடு கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்… கடலோர மாவட்ட மக்களுக்கு வெதர்மேன் வாழ்த்து!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பள்ளதாக வெதர்மேன் கூறியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பள்ளதாக வெதர்மேன் கூறியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mansoon

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் உள்ளது. சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

john

இந்த நிலையில், வானிலை ஆய்வாளரும் தமிழக மக்களால் வெதர்மேன் என்று அழைக்கப்படுபவருமான பிரதீப் ஜான் இன்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மழை பற்றி பதிவிட்டுள்ளார். அதில், “கிறிஸ்துமஸ் வர உள்ளதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று மழை பெய்ய உள்ளது. தற்போது வரும் மழையை அனுபவியுங்கள். புதுக்கோட்டை, திருவாரூர். தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரியில் மழை பெய்யும். இந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று மட்டுமல்ல நாளையும் தொடரும். இந்த முறை கிறிஸ்துமஸ் மழையோடு கடக்க வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.