மழையால் தரைமட்டமான வீடு… ஒன்றரை வயது குழந்தை உள்பட மூவர் பலி!

 

மழையால் தரைமட்டமான வீடு… ஒன்றரை வயது குழந்தை உள்பட மூவர் பலி!

பாதிக்கப்பட்ட மற்ற இருவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடலூர் கம்மியம்பேட்டையைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் தனது வீட்டில் நேற்றிரவு தனது மனைவி மற்றும் குழந்தை உள்பட 5 பேர் கொண்ட பேர் குடும்ப உறுப்பினர்களுடன் தூக்கி கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் இவரின் மண் வீடு  திடீரென இடிந்து விழுந்தது.

TTN

இதில் நாராயணனின் மனைவி மாலா, மகள் மகேஷ் மற்றும் ஒன்றரை வயது பேத்தி தனுஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பாதிக்கப்பட்ட மற்ற இருவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இறந்தவர்களின் சடலத்தை மீட்ட போலீசார்  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். 

TTN

இந்த விபத்து குறித்த முதற்கட்ட  விசாரணையில், நாராயணனின் வீடு ரயில் பாதை அருகிலிருந்துள்ளது. கனமழை காரணமாக அப்பகுதி தண்ணீர் தேங்கி இருந்துள்ளது.  இதையடுத்து எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்ற அதிர்வில் ஈரப்பதத்துடன் இருந்த  இவரது வீடு இடிந்து விழுந்துள்ளது  தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.