மளிகை கடைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் பண்ணியவருக்கு கத்தி குத்து..!?

 

மளிகை கடைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் பண்ணியவருக்கு கத்தி குத்து..!?

கிருஷ்ணன் என்பவர் பம்மல் மூங்கில் ஏரி  பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.அதே பகுதியில் வசிக்கும் இருபது வயது பெண் ஒருவர் ரெகுலராக அந்தக் கடையில்தான் மளிகைப் பொருள்கள் வாங்குவது வழக்கமாம்.

கிருஷ்ணன் என்பவர் பம்மல் மூங்கில் ஏரி  பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.அதே பகுதியில் வசிக்கும் இருபது வயது பெண் ஒருவர் ரெகுலராக அந்தக் கடையில்தான் மளிகைப் பொருள்கள் வாங்குவது வழக்கமாம்.

women

கடைக்கு அந்தப் பெண் வரும்போதெல்லாம் கிண்டலாகப் பேசுவாராம். சம்பவம் நடந்த அன்று,எல்லை மீறி பாலியல் தொந்தரவு செய்ததாக சம்பந்தப்பட்ட பெண் தனது பெற்றோரிடம் போய் புகார் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து அந்தப் பெண்ணின் தந்தை,தனது உறவினர்கள் சிலரோடு போய் கிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது.வார்த்தை முற்றியதில் பெண்ணின் உறவினர்கள் கடைக்குள் புகுந்து கிருஷ்ணனைத் தங்கியிருக்கிறார்கள்.இதில் யாரோ ஒருவர் கத்தியால் குத்தியதில் கிருஷ்ணன் பலத்த காயமடைந்திருக்கிறார்.

knife

அருகில் உள்ளவர்கள்,அவரை உடனடியாக குரோம்பேட்டை மருத்துவமனையில் கொண்டு போய்  சேர்த்திருக்கிறார்கள்.அங்கு அவருக்கு சிகிச்சை முடிந்ததும் காவல்துறை கிருஷ்ணனை காவல்நிலையத்துக்கு அழைத்துப்போய் விசாரணை செய்து வருகிறார்கள்.
கத்தியால் குத்திய நபர் யாரென்பது குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமெராவை ஆய்வு செய்தபின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று காவல்துறை வட்டாரத்தில் சொல்லியிருக்கிறார்க