மல்லுக்கட்டும் திமுக – அதிமுக: மீண்டும் வேலூரில் மோதவுள்ளது இவங்க தான்!
ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வேலூரில் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராகக் கதிர் ஆனந்தும், அதிமுக வேட்பாளராக ஏ.சி.சண்முகமும் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தும், அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இவர்களை தவிர மேலும் 22 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர்.
இதையடுத்து வேலூர் தொகுதியில் கட்டுக்கடங்காத பணப்புழக்கம் காரணமாக வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பாக, ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வேலூரில் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வரும் 18 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் 19 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலனை செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பு மனுக்களை திரும்ப பெற 22 ஆம் தேதி கடைசி நாள் என்றும் வாக்குப் பதிவு முடிந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராகக் கதிர் ஆனந்த் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல் வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஏற்கனவே போட்டியிடுவதாக அறிவித்த புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது