மலை உச்சியில் குடியரசு தினம் கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் புகைப்படம்!

 

மலை உச்சியில் குடியரசு தினம் கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் புகைப்படம்!

நடிகர் அக்‌ஷய் குமார்  தன் குடும்பத்தோடு மலைப் பகுதி ஒன்றுக்குச் சென்று குடியரசு தின விழாவைக் கொண்டாடியுள்ளார்.

மும்பை: நடிகர் அக்‌ஷய் குமார்  தன் குடும்பத்தோடு மலைப் பகுதி ஒன்றுக்குச் சென்று குடியரசு தின விழாவைக் கொண்டாடியுள்ளார்.

பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் சமீபத்தில்   2.0 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்நிலையில் மலைப் பகுதி ஒன்றில் அக்‌ஷய் தனது மனைவி ட்விங்கிள் கண்ணா மற்றும் மகள் நிதாரா ஆகியோருடன் தேசியக் கொடியை ஏந்தியவாறு  டிரெக்கிங் சென்று  குடியரசு தினத்தைக் கொண்டாடினார். அப்போது எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து பதிவிட்டுள்ள அவர், ‘அதிகாலை விடியல் கரடுமுரடாக தொடங்கியது. குடும்பத்துடன் உயரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். குடியரசு தின உத்வேகத்துடன் மிதக்கிறேன்’என்று தெரிவித்துள்ளார்.  

அதே பதிவில் அக்‌ஷய் குமார் தனது அடுத்த படமான ‘கேசரி’-இன் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளார். இந்த படம் மார்ச் 21-ம் தேதி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.