மறையாத மனிதம்! காலில் அடிப்பட்ட முதியவரை முதுகில் தூக்கிச்சென்று உதவிய காவலர்!!

 

மறையாத மனிதம்! காலில் அடிப்பட்ட முதியவரை முதுகில் தூக்கிச்சென்று உதவிய காவலர்!!

காலில் அடிப்பட்ட முதியவரை முதுகில் தூக்கிச்சென்று உதவிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காலில் அடிப்பட்ட முதியவரை முதுகில் தூக்கிச்சென்று உதவிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஹைதராபாத், கே.எல். நகர் பகுதியில் கனமழை காரணமாக சாலைகளை வெள்ளநீர் ஆக்கிரமித்தது. இதனால் மக்கள் சாலைகளில் நடக்கமுடியாமல் அவதிக்குள்ளாகினர். மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதனை  போக்குவரத்து ஆய்வாளர் நாகமல்லு மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார்.

அப்போது அந்தவழியாக இருசக்கரவாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், வயதானவரை அழைத்துக்கொண்டு சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். மழைநீர் அதிகம் தேங்கியிருந்ததால் சாலையை கடக்க முடியாமல் தடுமாறிவிழுந்தார். இதனால் அந்த முதியவர் பாதிக்கப்பட்டார். அவருடைய காலில் ஏற்கனவே அடிபட்டு கட்டு போடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த போக்குவரத்து ஆய்வாளர் முதியவரை தூக்கிக்கொண்டு சாலையை கடக்க உதவி செய்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.