மறைமுக தேர்தலுக்குத் தமிழக அரசு அவசர சட்டம் : எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் மனு !

 

மறைமுக தேர்தலுக்குத் தமிழக அரசு அவசர சட்டம் : எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் மனு !

உள்ளாட்சித் தேர்தலின் பழைய அறிவிப்பாணையை ரத்து செய்து, மாநில தேர்தல் ஆணையம் கடந்த 7 ஆம் தேதி புதிய தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட்டது.

உள்ளாட்சித் தேர்தலின் பழைய அறிவிப்பாணையை ரத்து செய்து, மாநில தேர்தல் ஆணையம் கடந்த 7 ஆம் தேதி புதிய தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட்டது. அதன் படி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மற்றும் 30 ஆம் தேதி இரண்டு கட்டமாக நடைபெறும் என்றும் மறைமுகத் தேர்தல் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப் போவதாகத் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  

ttn

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மறைமுக தேர்தலை ரத்து செய்யக் கோரி பொது நல மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தலாம் என்று அரசியல் சாசனத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டத்திற்குப் புறம்பான இதனை ரத்து செய்து அந்த அனைத்து பதவிகளுக்கும் நேர்முகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.