மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது காவல்  நிலையத்தில் பரபரப்பு புகார்!

 

மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது காவல்  நிலையத்தில் பரபரப்பு புகார்!

ஜே.கே.ரித்தீஷின் மனைவி மீது அவர் வீட்டில் பணியாற்றி வந்த கேசவன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சென்னை: ஜே.கே.ரித்தீஷின் மனைவி மீது அவர் வீட்டில் பணியாற்றி வந்த பாண்டி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான, ஜே .கே.ரித்தீஷ் கடந்த மாதம், தேர்தல் பிரச்சாரத்திற்காக ராமநாதபுரம் சென்று இருந்தார். அப்போது திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த மறைவு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜே .கே.ரித்தீஷ்

இந்த நிலையில்  இவருடைய மனைவி ஜோதி, ஆபாசமாக பேசியும், அடியாட்களை கொண்டு மிரட்டல் விடுவதாக அவருடைய வீட்டில் வேலை செய்த கேசவன் என்பவர், சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.

அந்த புகாரில் ‘கடந்த 10 ஆண்டுகளாக ஜே .கே .ரிதீஷிடம்  தான் பணியாற்றி வருவதாகவும். அவர், அவருக்கு சொந்தமான வீட்டில் தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் தங்கி கொள்ளுமாறு கொடுத்து விட்டார். இதனால் அவரிடம் பணி செய்ததற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை.

இந்நிலையில் தற்போது அவருடைய மனைவி ஜோதி, தனக்கு வர வேண்டிய ரூ.4 லட்சத்தை கொடுக்காமல், வீட்டை காலி செய்ய வேண்டும் என, அடியாட்களுடன் வந்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜே .கே.ரித்தீஷ்

அதே போல் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஜோதியிடம் வீட்டை கொடுத்துவிட்டு ஓடிவிடு என, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.கேசவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஜே .கே.ரித்தீஷ் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.