மறுமுகத்தைக் காட்டிய மோகன்லால்… பிக்பாஸ் மலையாளம் காரசார நிகழ்வு!

 

மறுமுகத்தைக் காட்டிய மோகன்லால்… பிக்பாஸ் மலையாளம் காரசார நிகழ்வு!

பிக்பாஸ் என்றாலே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லை. 15 பேரை பிடித்து ஒரு வீட்டுக்குள் போட்டுவிட்டு அவர்கள் போடும் சண்டையை சுத்தி பல கேமரா வைத்து படம் பிடித்து காட்டுவதை நாமும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

 

பிக்பாஸ் என்றாலே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லை. 15 பேரை பிடித்து ஒரு வீட்டுக்குள் போட்டுவிட்டு அவர்கள் போடும் சண்டையை சுத்தி பல கேமரா வைத்து படம் பிடித்து காட்டுவதை நாமும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

மலையாளத்தில் பிக்பாஸ் இரண்டாவது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை மோகன்லால் ஹோஸ்ட் செய்கிறார். இந்த சீசனில் போட்டியாளர்களிடையே தொடர்ந்து சச்சரவுகளுடன் பெரும் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

bigg boss-2

சமீபத்திய எபிசோடில், வீட்டில் நடந்த அனைத்து சச்சரவுகளுக்கும் ஹவுஸ்மேட்களை மோகன்லால் கடிந்துகொண்டார். உரையாடலின் போது, மோகன்லால் ஃபுக்ரு போட்டிகளில் பங்கேற்கவில்லை என்று விமர்சித்தார். சுஜோவுடன் நடந்த சண்டையால் தான் இப்படி நடந்துகொண்டதாக ஃபுக்ரு பதிலளித்தார். சுஜோ தன்னை ‘தள்ளிவிட்டார்’ என்று ஃபுக்ரு குறிப்பிட்டபோது, மோகன்லால் நீங்கள் யாரையும் அப்படி செய்யவில்லை? என்று பதிலுக்கு தாக்கினார். ஃபுக்ரு கேரளாவில் பிரபல டிக்டாக் ஸ்டார். 

போட்டியாளர்களை விமர்சித்தற்கு அப்பால் கேப்டன் பணியை வென்றதற்காக ராஜீத்தை பாராட்டினார். ஆர்யாவின் விளையாட்டு மனப்பான்மையைப் பற்றி கூறி நெகிழ்ந்து கொண்டார்.