மறுநாள் மணக்கோலத்தில் வரவேண்டிய பெண் பிணக்கோலத்தில் வந்தார் -கண்ணீர் வரவைக்கும் காரணம் 

 

மறுநாள் மணக்கோலத்தில் வரவேண்டிய பெண் பிணக்கோலத்தில் வந்தார் -கண்ணீர் வரவைக்கும் காரணம் 

செவ்வாய்க்கிழமை திருமணம் செய்யவுள்ள ஒரு 22 வயது  பெண் ,ஞாயிற்றுக்கிழமை இரவு காணாமல் போய் திங்கள்கிழமை பிணமாக  மாலன் ஆற்றில் இறந்து கிடந்தார்.  சமீபத்தில் நடந்த விபத்தில் இறந்த பெண்ணின்  தந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ளார் . அந்தப் பெண்ணின் தாயும் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

செவ்வாய்க்கிழமை திருமணம் செய்யவுள்ள ஒரு 22 வயது  பெண் ,ஞாயிற்றுக்கிழமை இரவு காணாமல் போய் திங்கள்கிழமை பிணமாக  மாலன் ஆற்றில் இறந்து கிடந்தார்.  சமீபத்தில் நடந்த விபத்தில் இறந்த பெண்ணின்  தந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ளார் . அந்தப் பெண்ணின் தாயும் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

malan river

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: “அந்த பெண்ணின்  தாயார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், அதே நேரத்தில் அவரது தந்தை சமீபத்தில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார், இதனால் இறந்த அந்த பெண்  கடந்த சில நாட்களாக வருத்தமாக இருந்ததாகவும் இந்த சூழலில்  அவரது திருமணம் செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டதால்  அவர் தற்கொலை செய்திருக்கலாம்” என்றனர் . 
இறந்த அந்த பெண்ணின் உடலை திங்களன்று, ஒரு வழிப்போக்கன், ராவலி கிராமத்திற்கு அருகிலுள்ள மாலன் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தூண்களில் ஒன்றில் சிக்கியிருப்பதைக் கண்டார்.  பின்னர் சடலம் கிராம மக்களால் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது .
தற்போது இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.