மர்மமான முறையில் இறந்த பயிற்சி மருத்துவர்: கொரோனாவும் இல்லை; தற்கொலையும் இல்லை! அதிர்ச்சியில் போலீசார்!

 

மர்மமான முறையில் இறந்த பயிற்சி மருத்துவர்: கொரோனாவும் இல்லை; தற்கொலையும் இல்லை! அதிர்ச்சியில் போலீசார்!

மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தீவிரமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதன் காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக தீவிரமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் விடுதியில் தங்கி பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அந்த வகையில் வேலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற இறுதியாண்டு மாணவி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் மாணவியர் விடுதியில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார்.

 

இதையடுத்து  நேற்று  விடுதி அறையில்  மர்மமான முறையில் பிரதீபா இறந்து கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் மர்மமாக உள்ளது. பிரதீபாவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளதாக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

tt

இந்நிலையில் மாணவி பிரதீபாவின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலமாகவே மரணத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முடியும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி  மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் பிரதீபா தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் இல்லையாம். இதனால் இந்த விவகாரத்தில் போலீசார் குழம்பி போயுள்ளனர்.