மர்மமான முறையில் இறந்த இயக்குநர் : உடலை வாங்க மறுக்கும் குடும்பத்தினர்!

 

மர்மமான முறையில் இறந்த இயக்குநர் : உடலை வாங்க மறுக்கும் குடும்பத்தினர்!

உணவுகளை சமைத்து சாப்பிட்டு வந்த இவர் மதிய ஒருவேளை உணவுக்கு மட்டும் தனது நண்பர்கள் இருக்கும் அறைக்கு சென்றுவிடுவாராம். 

அழைப்பிதழ், கேடயம் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் P.K.ராஜ்மோகன். இவர் ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊரான கோவைக்கு செல்ல முடியாமல் அறையிலேயே தங்கி இருந்துள்ளார். அங்கேயே தனது வேண்டிய உணவுகளை சமைத்து சாப்பிட்டு வந்த இவர் மதிய ஒருவேளை உணவுக்கு மட்டும் தனது நண்பர்கள் இருக்கும் அறைக்கு சென்றுவிடுவாராம். 

rr

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் மதிய உணவுக்கு வராததால், அவரது அறைக்கு உணவு எடுத்துக்கொண்டு நண்பர்கள் சென்றனர். நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர் கதவை திறக்காததால் கதவை உடைத்து பார்த்த போது, அவர் இறந்து கிடந்துள்ளார். 

rr

இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த கே.கே.நகர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ அறிக்கையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.  இருப்பினும் அவரது உடல் கொரோனா பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

ttn

இருப்பினும் இறந்த P.K.ராஜ்மோகனின்  நண்பரும் இயக்குனருமான கீரா, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் அவருக்கு  இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கோவையில் உள்ள P.K.ராஜ்மோகனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து விட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.