மருமகளைக் கொடூரமாக வெட்டிக் கொன்ற சின்ன மாமனார்.. முருங்கை மர தகராறில் நேர்ந்த விபரீதம்!

 

மருமகளைக் கொடூரமாக வெட்டிக் கொன்ற சின்ன மாமனார்.. முருங்கை மர தகராறில் நேர்ந்த விபரீதம்!

பல ஆண்டுகாலமாகச் செந்திலின் அப்பாவுக்கும், ராமனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமணம் என்னும் கிராமத்தில்  செந்தில்குமார்- கலைவாணி(27) தம்பதி வசித்து வந்தனர். செந்தில்குமாரின் சித்தப்பா ராமன்(50) இவர்களுக்குப் பக்கத்து வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். பல ஆண்டுகாலமாகச் செந்திலின் அப்பாவுக்கும், ராமனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இரண்டு வீட்டாருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்துள்ளது. ஒரு நாள் செந்தில்குமாரை அழைத்த ராமன், உங்கள் வீட்டு முருங்கை மரம் எங்கள் வீட்டின் மேல் உரசுகிறது என்று கூறியுள்ளார். அப்போது, இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

ttn

இதனால் ஆத்திரத்தில் இருந்த ராமன் செந்தில்குமார் இல்லாத நேரம் பார்த்து அவர்களின் வீட்டுக்குள் புகுந்து கலைவாணியைக் கத்தியால் குத்தியுள்ளார். கலைவாணியின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கலைவாணிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், கலைவாணி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.