மருமகளுக்காக பெற்ற மகனை போட்டு தள்ளிய தந்தை!!

 

மருமகளுக்காக பெற்ற மகனை போட்டு தள்ளிய தந்தை!!

மருமகளிடம் தகராறு செய்ததால் தந்தையே பெற்ற மகனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மருமகளிடம் தகராறு செய்ததால் தந்தையே பெற்ற மகனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குன்றத்தூரை சேர்ந்த நாகராஜ். கடந்த 25 ஆம் தேதி குடிபோதையில் அவரது மனைவி தீபாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை நாகராஜின் தந்தை பாண்டியன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியன் மகன் என்றும் பாராமல் அருகே இருந்த கத்தியால்  வயிற்றில் குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த நாகராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டார். தற்போது நாகராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து குன்றத்தூர் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.