மருமகளிடம் அத்துமீறிய கணவரை போட்டு தள்ளிய மாமியார்: அதிர வைக்கும் சம்பவம்!

 

மருமகளிடம் அத்துமீறிய கணவரை போட்டு தள்ளிய மாமியார்: அதிர வைக்கும் சம்பவம்!

 பாண்டியும் அவரது மனைவி மலரும் முனியாண்டி – பாண்டியம்மாள் தம்பதியரோடு ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்

பரமக்குடி: மருமகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த கணவனை கூலி படையை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் முனியாண்டி – பாண்டியம்மாள் தம்பதி. இவர்களுக்கு பாண்டி என்ற மகனும்  மலர் என்ற மருமகளும்  இருக்கின்றனர்.  ஒருமுறை பாண்டி ரயிலிலிருந்து தவறி விழுந்து கால்களை இழந்த நிலையில்  பாண்டியும் அவரது மனைவி மலரும் முனியாண்டி – பாண்டியம்மாள் தம்பதியரோடு ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இருப்பினும் பாண்டி – மலர் தம்பதியருக்கு திருமணமாகி  10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. 

murder

இந்நிலையில் மருமகள் மலருக்கு முனியாண்டி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பாண்டியம்மாள் கணவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தனது  நடவடிக்கையை மாற்றி கொள்ளாததால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார் பாண்டியம்மாள். அதன்படி மூன்று பேர் கொண்ட கூலிப்படை கும்பலை வைத்து கணவர் முனியாண்டியை, பாண்டியம்மாள் கொலை செய்துள்ளார். 

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல்நிலையத்தில் தன் கணவரை கொன்றுவிட்டேன் என்று கூறி சரணடைந்துள்ளார். இதையடுத்து பாண்டியம்மாளின் வீட்டுக்கு விரைந்த போலீசார்,  கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த முனியாண்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.