‘மருமகனை திருமணம் செய்து கொண்ட மாமியார்’ : அதிர்ச்சியில் உறைந்த ஒட்டுமொத்த குடும்பம்!

 

‘மருமகனை திருமணம் செய்து கொண்ட மாமியார்’ : அதிர்ச்சியில் உறைந்த ஒட்டுமொத்த குடும்பம்!

தனது 18 வயது மகளுக்கு  21 வயதான மணமகனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்

பஞ்சாப்  : அண்ணன் , தம்பி இருவரை தாய் மற்றும் அவரது மகள் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாபின் குர்தாஸ்புரில் உள்ள பெண் ஒருவருக்குச் சிறுவயதிலேயே திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது 37 வயதாகும் அந்த பெண்மணிக்கு  18 வயது மகள் உள்ளார். சமீபத்தில் தனது 18 வயது மகளுக்கு  21 வயதான மணமகனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார் அந்த பெண்.  இளம் ஜோடிகள் தங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆரம்பிக்கக் காத்திருந்த தருணத்தில் அந்த பெண்ணின் தாய் செய்த காரியம் அனைவரையும் கதிகலங்க வைக்கவிட்டது.

marriage

அந்த பெண்ணின் அம்மா, தனது மகளின் கணவருக்கு அண்ணனான 22 வயது நபரை,  திருமணம் செய்துகொண்டுள்ளார். தன்னை விட 15 வயது குறைவான மருமகனின் அண்ணன் மீது காதல் வயப்பட்ட அந்த பெண்மணி தனது கணவரை இதற்காக விவாகரத்தும் செய்துவிட்டார். தாயின் இந்த கள்ளக்காதல் விவகாரம் மகளுக்குத் தெரியவர அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இவர்கள் திருமணத்தை மொத்த குடும்பமும் எதிர்க்க தற்போது இந்த ஜோடி,  நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த வழக்கு வரும் அக்டோபர் 31-ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.

அம்மா மகள் இருவரும், உடன்பிறந்த அண்ணன்  தம்பியைத் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.