மருந்துகடை வைத்திருந்த நபர் தூக்கிட்டு தற்கொலை..காரணத்தை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை!

 

மருந்துகடை வைத்திருந்த நபர் தூக்கிட்டு தற்கொலை..காரணத்தை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை!

அவரது மனைவி செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது கூட, அவர் செல்போனை எடுக்க வில்லையாம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகரில் வசித்து வரும் மரகதலிங்கம் என்பவரிம் மகன் 
மகாராஜன்(32). இவர் கோவில்பட்டியில் மொத்த மருந்துக்கடை விநியோகஸ்தராக இருந்து வந்தார். கொரோனாவால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால் நேற்று கடைக்கு சென்றுள்ளார் மகாராஜன்.

ttn

கடைக்கு சென்ற அவர் இரவு வீடு திரும்பவில்லையாம். அவரது மனைவி செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது கூட, அவர் செல்போனை எடுக்க வில்லையாம். அவர் வேலை விஷயமாக எங்கேயாவது என்றிருக்கலாம் என்று எண்ணிய குடும்பத்தினர், அவரை மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று காலை வரையிலும் அவர் வீட்டுக்கு செல்ல வில்லையாம். 

அதன் பின்னர் இன்று காலை அவரது உறவினர்கள் மருந்து கடைக்கு வந்து பார்த்த போது, மகாராஜன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.