மருத்துவ மாணவர்களுக்கு உணவு, தண்ணீர் தராத கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் சென்னைக்கு இட மாற்றம்!

 

மருத்துவ மாணவர்களுக்கு உணவு, தண்ணீர் தராத கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் சென்னைக்கு இட மாற்றம்!

கோவையில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் சென்னைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் சென்னைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், அவர்கள் உணவு அருந்திய கேன்டீன் சமையலருக்கும் கொரோனா தொற்று இருந்தது. இதனால், கேன்ட்டீன் மூடப்பட்டது. ஆனால், மருத்துவ மாணவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்குவதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவில்லை.

dr-ashokan

இது குறித்து மருத்துவ மாணவர்கள் கல்லூரி முதல்வர், சுகாதாரத் துறை செயலாளர், அமைச்சர், முதல்வர் என பலருக்கும் வேண்டுகோள்விடுத்திருந்தனர். நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பதில் வந்ததே தவிர மருத்துவ மாணவர்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், மாணவர்கள் போராடும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், உணவு ஏற்பாடு செய்யாத கோவை மருத்துவக் கல்லூரி டீன் அசோகனை சென்னைக்கு இட மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு மாதத்தில் ஓய்வு பெற இருந்த அசோகன் இட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டதா என்ற தகவலை அரசு வெளியிடவில்லை.