மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம், சிறப்பூதியமாக வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி

 

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம், சிறப்பூதியமாக வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சுமார் 16 ஆயிரத்து 500 பேர் கொரோனா வைரஸ் தாக்கதால் உயிரிழந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திய கொரோனா தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்துவருகிறது. இந்தியாவில் சுமார் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 10 உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்கள் தன்னலம் பாராது 24 மணிநேரமும் பணியாற்றி வருகிறார்கள். 

coronavirus

கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம், சிறப்பூதியமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சுகாதார பணியாளர்களுக்கு சட்டப்பேரவையில் கைதட்டி முதலமைச்சர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.