மருத்துவமனை மாடியில் இருந்து குதித்த இளைஞர் மரணம் ! காரணம் நோயா? திருமணம் ஆகாத விரக்தியா?

 

மருத்துவமனை மாடியில் இருந்து குதித்த இளைஞர் மரணம் ! காரணம் நோயா? திருமணம் ஆகாத விரக்தியா?

கோவையில் பஞ்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளி ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செயது கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் பஞ்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளி ஒருவர்  திருச்சி அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செயது கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

திருச்சி பெல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி நாகராஜனுக்கு மனைவி மீராபாய், இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். முதல் மகனும், மகளும் திருமணம் முடிந்து வெளியூர் சென்றுவிட்டனர். கோவை பஞ்சாலையில் பணிபுரிந்து வந்த இளைய மகன் கணேசமூர்த்தியுடன் நாகராஜன் வசித்துவந் நிலையில் சிலவாரங்களாக காய்ச்சலால் கணேசமூர்த்தி அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணம் அடையாததால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி பூரண குணம் அடைந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்வதாக இருந்தது.  திருச்சி அரசு மருத்துவமனை இன்று காலை வழக்கம்போல நோயாளிகள் வருகையால் பரபரப்பாக இருந்த நிலையில் நேராக 6-வது மாடிக்கு சென்ற கணேசமூர்த்தி அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கணேசமூர்த்தி துடிதுடித்து உயிரிழந்தார்.

trichysucide

 

பொறியியல் பட்டதாரியான கணசே மூர்த்தி சரியான வேலை இல்லாத காரணத்தினாலும், திருமண ஆகாத காரணத்தினாலும் மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் காய்ச்சலால் குணம் அடைந்தாலும் அவருக்கு மஞ்சள் காமாலை இருந்ததாகவும் அதற்கு வைத்தியம் பார்க்காமல் வீட்டுக்கு அனுப்பியதால் வேதனையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த போலீஸார் கணேச மூர்த்தி உடலை கைப்பற்றி உடற்கூறுஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.