மருத்துவமனையில் இருந்த தப்பித்த கொரோனா நோயாளி பரிதாப பலி!
பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதேபோல் சென்னையில் 4,882 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 716 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8718ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதேபோல் சென்னையில் 4,882 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த 52 வயது நபர் ஒருவர் கடந்த 8 ஆம் தேதி நீரிழிவு நோய் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையறிந்த அந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பித்து வீட்டில் தலைமறைவானார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீஸில் புகார் கொடுக்க, போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.