மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

 

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): நடப்பாண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பி.ஆலீஸன் மற்றும்  தசுகோ ஹோஞ்ஜோ ஆகிய இருவருக்கு 2 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, புற்றுநோய் தொடர்பான மருத்துவ கண்டுபிடிப்புக்காக ஜேம்ஸ் பி.ஆலீஸன் மற்றும்  தசுகோ ஹோஞ்ஜோ ஆகிய 2 பேருக்கு 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு அறிவிக்கப்பட்ட இருவருக்கும் தலா ரூ.4 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.