மரத்தின் மீது கார் மோதி விபத்து.. அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் மரணம் !

 

மரத்தின் மீது கார் மோதி விபத்து.. அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் மரணம் !

பரம்பூர் என்னும் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(31) கடந்த 8 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக பணியாற்றி வந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் என்னும் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(31) கடந்த 8 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் இவரது தாயாரை  பரம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தார். நேற்று நடைபெற்ற உள்ளாட்சி மறைமுக தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறி விட்டு நேற்று இரவு சென்னை வந்துள்ளார். 

ttn

இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கரைத் திருச்சி விமான நிலையத்தில்  விட்டு விட்டு சென்னை திரும்பும் போது,  கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே அவர் சென்ற கார் அங்கிருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ttn

இதில்,  வெங்கடேசனும் ஓட்டுநர் செல்வமும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்குக் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் வெங்கடேசனின் உடலை இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும், ஓட்டுநர் செல்வத்தின் உடலைப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.