மரண பயம்… வெள்ளை மாளிகைக்கு பூட்டுப்போட்ட ட்ரம்ப்!

 

மரண பயம்… வெள்ளை மாளிகைக்கு பூட்டுப்போட்ட ட்ரம்ப்!

வாஷிங்டனில் அனுமதி இன்றி பறந்த மர்ம விமானத்தால் வெள்ளை மாளிகைக்கு பூட்டு போடப்பட்டது. 

அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்கு பின் விமானங்களின் போக்குவரத்து அதிகம் கண்காணிக்கப்படுகிறது.  குறிப்பாக வெள்ளை மாளிகைக்கு மேலே விமானங்கள் பறப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மாலை வெள்ளை மாளிகைக்கு மேலே மர்ம விமான் ஒன்று பறந்ததால்  பாதுகாப்பு காரணங்களால் அமெரிக்க வெள்ளைமாளிகை மூடப்பட்டது.  பணியாளர்களை தவிர வெள்ளை மாளிகைக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிக்கைக்கு கீழ் இருக்கும் பங்கருக்குள் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார்.

White House

சந்தேகத்திற்குரிய வகையில் போர் விமானங்கள் அமெரிக்க வான்பரப்பில் பறந்ததால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் போக்கு அதிகரித்து காணப்படும் நிலையில் அந்த விமானம் ஈரானால் அனுப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேலும் அப்பகுதியில் போர் விமானங்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளன.