மரணத்திற்கு நீதி வேண்டும் ! மணிக்கட்டில் எழுதிவிட்டு பெண் தற்கொலை !

 

மரணத்திற்கு நீதி வேண்டும் ! மணிக்கட்டில் எழுதிவிட்டு பெண் தற்கொலை !

தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விடுதலை செய்ததை கண்டித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விடுதலை செய்ததை கண்டித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

 

உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகர் அருகே ஒரு பெண்ணை இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை அடுத்து அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் ஒரு சில மாதங்களிலேயே வெளியில் வந்து தங்கள் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்குமாறு அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் தந்தை தெரிவிக்கும்போது குற்றவாளிகளை தண்டிக்காமல் ஜாமீன் வழங்கி போலீசார் விடுவித்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

suicide

இந்நிலையில் புகாரை வாபஸ் வாங்குமாறு அந்த 24 வயது பெண் அந்த இளைஞர்களால் மிரட்டப்பட்டு வந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து மீண்டும் காவல்துறையை நாடி அந்த இளைஞர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யுமாறு புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பெண்ணின் மணிக்கட்டில் எழுதியிருந்த வாசகத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் அவரை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்களின் பெயரை எழுதி வைத்துள்ளார். மேலும் தன்னுடைய மரணத்திற்கு காரணமானவர்களை இனிமேலாவது தண்டியுங்கள் என மணிக்கட்டில் எழுதியுள்ளார் அந்த பெண். சமுதாயத்தில் கயவர்களால் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் மீது தைரியமாக புகார் கொடுத்துவிட்டு தன்னம்பிக்கையுடன் வாழ நினைத்த பெண்ணுக்கு இப்படி ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளை ஜாமினில் விட்டதாலேயே பெண் உயிரிழக்க நேர்ந்ததாக பலர் குற்றம்சாட்டினார்.