மரக்கன்று நட்ட பெண் காவலர்கள் மீது ஆளுங்கட்சியினர் சரமாரி தாக்குதல்

 

மரக்கன்று நட்ட பெண் காவலர்கள் மீது ஆளுங்கட்சியினர் சரமாரி தாக்குதல்

தெலங்கானாவில் காவல்துறை மற்றும் வனத்துறையினரை ஆளும் கட்சியினர் கடுமையான தாக்கினர். 

தெலங்கானாவில் மரக்கன்று நட்ட காவல்துறை மற்றும் வனத்துறையினரை ஆளும் கட்சியினர் கடுமையான தாக்கினர். 

கொமரம்பீம் அசிபாபாத் மாவட்டத்தின் ககாஸ்நகர் பகுதியில் மரக்கன்றுகளை நடும் ‌நிகழ்ச்சி வனத்துறை சார்பில் நடைபெற்றது. அதற்கு ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் உள்ளூர் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில், மரக்கன்றுகளை நட வந்த வனத்துறையினர் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் மீது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் பிரம்புகளால் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அதில் டிராக்டர் மீது நின்றிருந்த காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்து மயங்கினார்.