மயிலாப்பூர் காமெடியன்கள் அட்வைஸ் வேண்டாம்… ரஜினிக்கு மகளிர் காங்கிரஸ் நிர்வாகி கோரிக்கை
சுயமாக சிந்தித்து பேசுங்கள், மயிலாப்பூர் காமெடியன்கள் அட்வைசை கேட்காதீர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளர் லக்ஷ்மி ராமச்சந்திரன் ட்வீட் செய்துள்ளார்.மன்னிப்பு கேட்க மாட்டேன், எனக்கு மற்றவர்கள் சொன்னதை, பத்திரிகைகளில் வந்ததைத்தான் துக்ளக் விழாவில் பேசினேன் என்று ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் லக்ஷ்மி ராமச்சந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
சுயமாக சிந்தித்து பேசுங்கள், மயிலாப்பூர் காமெடியன்கள் அட்வைசை கேட்காதீர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளர் லக்ஷ்மி ராமச்சந்திரன் ட்வீட் செய்துள்ளார்.
Sir @rajinikanth: Am a big fan of you. I know we live in a democratic country&you have all rights to aspire to be in politics.Left or Right is a matter of personal choice.Pls don’t keep some mylapore based comedians as your advisers.I am worried that they’ll bring disrepute to u.
— Lakshmi Ramachandran (@laksr_tn) January 21, 2020
மன்னிப்பு கேட்க மாட்டேன், எனக்கு மற்றவர்கள் சொன்னதை, பத்திரிகைகளில் வந்ததைத்தான் துக்ளக் விழாவில் பேசினேன் என்று ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் லக்ஷ்மி ராமச்சந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதில், “ரஜினிகாந்த் சார் நான் உங்களின் தீவிர ரசிகை. நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம், உங்கள் அரசியல் நிலைப்பாடு பற்றி அறிவிக்க தெரிவிக்க உங்களுக்கு முழு உரிமையும் உள்ளது என்பது எனக்குத் தெரியும். அது இடதோ, வலதோ அது தனிநபர் விருப்பம். ஆனால், மயிலாப்பூரைச் சேர்ந்த காமெடியன்களை உங்கள் ஆலோசகராக வைத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் புகழை அவர்கள் கெடுத்துவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.