மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு பரிசீலனை – முதல்வர் பழனிசாமி

 

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு பரிசீலனை – முதல்வர் பழனிசாமி

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

நாகை: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

நாகை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது அவர் பேசுகையில் “நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை விரைவில் பரிசீலித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள் உள்பட மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.