மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்ககோரி இருசக்கர வாகன பேரணி!

 

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்ககோரி இருசக்கர வாகன பேரணி!

மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி அப்பகுதி மக்கள்  பிரமாண்ட இருசக்கர வாகன பேரணியை நடத்தினர். 

நாகப்பட்டினம் : மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி அப்பகுதி மக்கள்  பிரமாண்ட இருசக்கர வாகன பேரணியை நடத்தினர். 

mylaidurai

நாகப்பட்டினம் மாவட்டத்தின்  மயிலாடுதுறையைத்  தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி அப்பகுதி மக்கள்  கடந்த 25 ஆண்டுகளாக வலியுறுத்தி  வருகின்றனர்.  மக்களுடன் சேர்ந்து ‘காவிரி அமைப்பு’ போராடி வருகிறது. அந்த வகையில், நேற்று காவிரி அமைப்பின் சார்பில் பிரமாண்டமான இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.இந்த  பேரணியில் ஏராளமான இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வணிகர்கள், பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். 

bike rally

அப்போது மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி துண்டுப் பிரசுரங்கள் வழங்கியதோடு முழக்கங்களையும் எழுப்பினர். அப்போது மக்கள் மத்தியில் பேசிய காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன், மயிலாடுதுறை தனி மாவட்டமாகப் பிரிக்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.

bike

அதனால் அதிமுக அரசு அதை உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து  ‘காவிரி அமைப்பின்’ குழுவினர், மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை நகராட்சி ஆணையரிடம் அளித்தனர்.