மயானத்தில் மதுஅருந்தியதை தட்டிக் கேட்டதால் கொலை ! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி !!

 

மயானத்தில் மதுஅருந்தியதை தட்டிக் கேட்டதால் கொலை ! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி !!

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 
ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பார்சாட் தொகுதியில் உள்ள பாமங்காச்சி நகரில் உள்ள மயானத்தில் 3 பேர் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் மயானத்தில் மது அருந்துவதை தட்டிக்கேட்ட 24 வயது இளைஞர் மதுபிரியர்கள் 3 பேரால் கொல்லப்பட்டார். 

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 
ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பார்சாட் தொகுதியில் உள்ள பாமங்காச்சி நகரில் உள்ள மயானத்தில் 3 பேர் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அங்கு வந்த அலி உசைன் என்பவர் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் வேறு எங்கு சென்றாலும் போலீஸ் தொல்லை இருக்கிறது.

murder-78.jpg

அதனால் இங்குதான் குடிப்போம் என தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு ஆட்சேபணை தெரிவித்த அலி உசைன் அவரை கண்டித்தார். இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதை அடுத்து மதுபிரியர்கள் 3 பேரும் சேர்ந்து அலி உசைனை அரிவாளால் வெட்டினர். சம்பவத்தை பார்த்து காப்பாற்ற சென்ற உசைனின் தந்தையும் அவர்களால் தாக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் உசைன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் தந்தை படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்துள்ளார். 

இதற்கிடையே சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் சிராஜுல் ஹக், ஷபிக் அலி மற்றும் ஹபீசுல் ஹக் என அடையாளம் கண்டுள்ளனர். தலைமவைன அவர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.