மயங்கி விழுந்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!

 

மயங்கி விழுந்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!

திருமணத்தை நிறுத்த மணப்பெண் மயங்கி விழுந்து நடபாகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி: திருமணத்தை நிறுத்த மணப்பெண் மயங்கி விழுந்து  நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி குழித்துறை அருகே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், பாகோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகோடு பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமண நாளான நேற்று  நேற்று திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. அப்போது  மணமகனின் கையில், மணமகளின் கையை பிடித்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வாக்குறுதிகள் வாசிக்கப்பட்டபோது, அந்த மணப்பெண் திடீரென்று மயங்கி விழுந்தார். 

இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள அறைக்கு கொண்டுசெல்லப்பட்ட மணப்பெண்ணை மருத்துவர் வந்து  பரிசோதித்தார். அதில் அந்த இளம்பெண்ணுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்று மருத்துவர் கூறினார். அப்போது  மருத்துவரின் கையை பிடித்துக்கொண்ட இளம்பெண், என்னை காப்பாற்றுங்கள், எனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இந்நிலையில் மணமகளின் சம்மதம் இல்லாமல் திருமணத்தை நடத்தினால், சட்டச் சிக்கல் ஏற்படும் எனக் கூறி திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் இருவீட்டார் மத்தியிலும் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.