மயக்க மருந்து கொடுத்து 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்

 

மயக்க மருந்து கொடுத்து 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்

மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை இந்த கும்பலே வீட்டின் அருகில் விட்டுச் சென்றிருக்கிறது. சிறுமியின் நிலையை கண்ட தாயார், துடித்தபடி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்பிறகு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் தெரிய வந்துள்ளது.

புதுச்சேரி, மாட்டுக்காரன்சாவடி கிராமத்தை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை நரேஷ் என்பவன் காதலித்து வந்திருக்கிறான். மாணவியின் தாயார் இல்லாத போது சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி அருகில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்துகொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

gjdghj

பின்னர் அவனது நண்பர்கள் ராஜா மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை அழைத்து சிறுமியை நாசம் செய்திருக்கிறான். மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை இந்த கும்பலே வீட்டின் அருகில் விட்டுச் சென்றிருக்கிறது. சிறுமியின் நிலையை கண்ட தாயார், துடித்தபடி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்பிறகு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் தெரிய வந்துள்ளது.

asfrg

மகளை நாசம் செய்த கும்பலுக்கு தண்டனை கிடைக்க வேண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பெயரில் நரேஷ், ராஜா மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

sggssg

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளுக்குப் பிறகு தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சம்பவங்களே அதற்கு ஒரு சான்று.

இதையும் வாசிங்க: எம்.ஜி.ஆர் கனவு நனவாக இத்தனை கோடி ரூபாயா?!