என்னால் எப்படி பாட முடியும். நான் விரைவில் செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இங்கிலாந்து பாடகி டஃபி. கிராமி விருது பெற்ற இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. பிரபல பாடகியான டஃபி திடீரென்று என்னவானார் என்பது தெரியாமல் போனது. இதனால் அவரது ரசிகர்கள் குழப்பத்திலிருந்தனர்.
இந்நிலையில் பாடகி டஃபி இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சியை கொடுக்கும் ஒரு பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், ”இதை எப்படி எழுதுவது என்று நான் பல முறை யோசித்துள்ளேன். நான் ஏன் இப்போது இதை எழுதுகிறேன் என்று கூட எனக்கு தெரியவில்லை. நீங்கள் நான் எங்கு சென்றேன், என்னவானேன் என்று எண்ணியிருக்கலாம். என்னை ஒரு செய்தியாளர் தொடர்புகொண்ட போது நான் உண்மையை அவரிடம் சொல்லிவிட்டேன். ஆம், நான் நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். எனக்கு மயக்க மருந்து கொடுத்து என்னை நாசம் செய்துவிட்டார்கள். சில நாட்கள் என்னை அடைத்து வைத்திருந்தார்கள். நான் அதையும் மீறி வந்துவிட்டேன். நான் ஏன் என் குரலின் மூலம் இதை வெளிப்படுத்தவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். என் என் கண்களிலிருந்த சோகத்தை நான் வெளிக்காட்ட விரும்பவில்லை. என் இதயம் நொறுங்கி விட்டது. அப்படி இருக்கும் போது என்னால் எப்படி பாட முடியும். நான் விரைவில் செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.