மயக்கத்தில் இருந்த பெண் நோயாளி பலாத்காரம் ! பிரபல மருத்துவமனை ஆண் செவிலியரின் அட்டூழியம் !

 

மயக்கத்தில் இருந்த பெண் நோயாளி பலாத்காரம் ! பிரபல மருத்துவமனை ஆண் செவிலியரின் அட்டூழியம் !

ஹரியானா மாநிலம் குருகிராமில் தனியார் மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் தனியார் மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதே மருத்துவமனையில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வரும் ஆண் செவிலியர் அந்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்குள் அதிகாலையில் சென்றுள்ளார். அங்கு அந்த பெண் மயக்க நிலையில் இருந்ததை பார்த்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்க நிலையில் இருந்ததால் தனக்கு நடக்கும் கொடுமையில்  இருந்து அந்த பெண்ணால் விடுபடமுடியவில்லை.

women

பின்னர் காலையில் மயக்கம் தெளிந்த நிலையில் பிரபல மருத்துவமனையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் வேதனை அடைந்த அவரது கணவர் முதலில் மருத்துவமனை நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அந்த ஆண் செவிலியர் மீது புகார் அளிக்க அவரை விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது காவல்துறை. தற்போது அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளித்து வருகிறது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் இந்திய தண்டனைச் சட்டம் 354 ஏ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.