மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடை: விஜய் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
நடிகர் விஜய் – இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.
பிகில் படத்துக்காகப் பேனர் வைக்கத் திரட்டிய பணத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு விஜய் ரசிகர்கள் புத்தாடை வழங்கி மகிழ்வித்தனர்.
பிகில் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் – இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பிகில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
பேனர் வைக்க திரட்டிய பணத்தில்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குப் புத்தாடை வழங்கி மகிழ்ந்த விஜய் ரசிகர்கள்.சிதம்பரம் மக்கள் நெகிழ்ச்சி!❤️
தரமான சம்பவம் ???
கேட்டது செய்யும்போது இகழும் யாரும் நல்லது செய்யும்போது பாராட்டுவதில்லை! #Bigil pic.twitter.com/HsHXmcbWJs
— மதுரைப்பிள்ளை (@maduraipillai) October 25, 2019
இந்நிலையில் சிதம்பரத்தில் பேனர் வைப்பதற்காகத் திரட்டிய பணத்தில் விஜய் ரசிகர்கள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குப் புத்தாடை வழங்கி மகிழ்வித்தனர்.
மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளியில் படித்து வரும் அவர்களுக்கு நேரில் சென்று புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்தும் கூறினர். ஏழை எளியவர்களுக்கு உதவ முன்வந்த விஜய் ரசிகர்களுக்கு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியோடு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.