மன்னித்து விடுங்கள் அனுஷ்கா… தேநீர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

 

மன்னித்து விடுங்கள் அனுஷ்கா… தேநீர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

அனுஷ்காவுக்கு அணி தேர்வாளர்களில் ஒருவர், தேநீர் கொடுத்து உபசரித்தார் என்று கூறி  சர்ச்சையை கிளப்பியது  தான்

நடிகை அனுஷ்கா சர்மாவிடம் இந்திய அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் மன்னிப்பு கோரியுள்ளார். 

anushka

இந்திய அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் சமீபத்தில் அணி தேர்வாளர்களை சாடினார். இதில் நடிகையும் விராட் கோளின்  மனைவியுமான அனுஷ்கா சர்மா பெயரும் அடிபட்டது. காரணம், உலகக் கோப்பை போட்டியின் போது, அனுஷ்காவுக்கு அணி தேர்வாளர்களில் ஒருவர், தேநீர் கொடுத்து உபசரித்தார் என்று கூறி  சர்ச்சையை கிளப்பியது  தான்.  இருப்பினும் அவர் யார் அந்த தேர்வாளர் என்பது குறித்தெல்லாம் வாய் திறக்கவில்லை. 

 

இதையடுத்து  நடிகை அனுஷ்கா  இந்தக் குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,  ‘எனக்கு தேர்வாளர்கள் யாரும் தேநீர் கொடுக்கவில்லை. நான் அவர்களின் அறையிலிருந்து போட்டியை  காணவில்லை. உங்கள் பிரச்னையில்  என் பெயரை இழுக்காதீர்கள். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று பதிலுக்கு சாடினார்.

anushaka

 இந்நிலையில் பரூக் என்ஜினீயர் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், ‘நான் அனுஷ்கா சர்மாவை ஏதும் சொல்லவில்லை. அவர்  ஒரு சிறந்த பெண். அவர் மீது எனக்கு கோபம் இல்லை. நான் விளையாட்டாக சொன்னது பெரிதுபடுத்த படுகிறது. எனக்கு தேர்வாளர்கள் மீது தான் கோபமே தவிர அனுஷ்கா மீது இல்லை. என் கருத்து உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்’ என்று கூறி இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.