மனை வாங்குவதற்கு முன்பு இதையெல்லாம் கவனத்தில் வைத்திருங்க! சிறப்பான வாஸ்து அமைந்து செல்வம் பெருகும்

 

மனை வாங்குவதற்கு முன்பு இதையெல்லாம் கவனத்தில் வைத்திருங்க! சிறப்பான வாஸ்து அமைந்து செல்வம் பெருகும்

மனிதர்கள் வாழக்கூடிய உலக உருண்டை பூமி என்கிற கிரகம் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில் சூரியனை சுற்றுகின்றது

மனிதர்கள் வாழக்கூடிய உலக உருண்டை பூமி என்கிற கிரகம் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில் சூரியனை சுற்றுகின்றது. இதனால் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் காந்தப்புயலின் சராசரி தாக்குதல் சார்ந்த விசயமே தெருகுத்துக்கள் மற்றும் பார்வைகள் என்கிறோம்.

சூரியக்கதிர் மூலமாக ஏற்படும் மாறுபட்ட கதிர் தாக்கங்களும் பூமியில் கட்டப்படும் கட்டடங்களில் ஒரு பக்கத்தில் அதிகமாகவும், மற்றொரு பக்கத்தில் குறைவாகவும் இருக்கும். ஆக நிலைத்தன்மையான வேகத்தைத் தடுத்து வைப்பதே வாஸ்து சார்ந்த தெருப்பார்வைகளும், தெரு தாக்கங்களும் ஆகும். தரும்.

house

இது சார்ந்த அறிவியலே ‘காஸ்மிக்’ கதிர் என்கிற பெயரில் வீட்டினுள் பரவும் முறையை உச்சம், நீச்சம் என அழைக்கப்படுகிறது. .அந்த வகையில் காஸ்மிக் கதிர்கள் பலமாக வரும் பகுதியை உச்சம் எனவும், அது பலவீனமாக இருக்கும் இடத்தை நீச்சம் எனவும் பிரிக்கப்படுகிறது.

ஒரு இல்லத்தில் அல்லது இடத்தில் படுகின்ற சாலைகளின் மூலமான பார்வைப்படுவதை, தெருத்தாக்கம் அல்லது தெருப்பார்வை என்கிறோம். இந்த வகையில் கட்டடங்களுக்கு தெருத்தாக்கம் என்பது தெருச்சூலம், வீதிசூலம், தெருக்குத்தல், தெருநெருங்கல், சாலைக்குத்தல், வீதிக்குத்தல், தெருப்பார்வை எனப் பல பெயர்களால் கூறப்படுகிறது.

house

எந்த ஒரு இல்லத்துக்கும் வெளியே சாலை அல்லது வீதி இருக்கும். அந்த வீதிக்கு எதிர்திசையில் ஒரு சந்தோ, தெருவோ, பெரிய வீதியோ அல்லது சாலையோ வருமானால், அதற்குப் பெயர்தான் தெருப்பார்வை மற்றும் தெருத்தாக்கம் ஆகும். அது ஒரு இல்லத்தில் எந்த பாகம் தொடங்கி எந்தப் பகுதி வரை வருகின்றது என்று பார்க்கவேண்டும்.

வடகிழக்கு வடக்கு ஈசான்யம், வடகிழக்கு கிழக்கு ஈசான்யம், மற்றும் தென்கிழக்கு கிழக்கு அக்னி மற்றும் தெற்கு அக்னி, தென்மேற்கு தெற்கு நைருதி, தென்மேற்கு மேற்கு நைருதி மற்றும் மேற்கு சார்ந்த வடமேற்கு வாயுவியம், வடமேற்கு வடக்கு சாரந்த வாயுவியம் என இந்தத் திசைகளின் பெயரால் தெருப்பார்வை மற்றும் தெருக்குத்தல் அழைக்கப்படுகின்றது.

house

இது மட்டுமின்றி வடகிழக்கு உச்சம், தென்கிழக்கு தெற்கு உச்சம் , வடமேற்கு வடக்கு நீசம், வடமேற்கு மேற்கு உச்சம்,தென்மேற்கு மேற்கு நீசம், தென்மேற்கு தெற்கு நீசம்,தெற்கு நீசம்,என மற்றும் பல பெயர்களினாலும் தெருக்குத்தல் அழைக்கப்படுகின்றது.

தெருத் தாக்கங்கள் மற்றும் பார்வைகளும், தெருகுத்துக்களும் ஒருவகை நேர் மறை தாக்கங்கள் கொண்டவையாகவும், மற்றொரு வகை எதிரமறை தாக்கம் கொண்டவையாகவும் இருக்கிறது. ஆக தெருவின் இட அமைப்பு தன்மைக்குத் தக்கபடி மனைக்குப் பலன்கள் என்பது இருக்கும்.

இல்லத்தின் வடகிழக்கு ஈசான்ய பகுதியை தாக்கும் தெருத் தாக்கம், குடும்பத்தில் இருக்கும் தலைப்பேரன்களின் நல்வாழ்க்கை முறைக்கு உதவக்கூடியது. கிழக்கு அக்னி பகுதியில் தாக்கும் தெருத் தாக்கம் மற்றும் பார்வைகள் தொழில் சார்ந்த நிகழ்வுகளில் நஷ்டத்தை தரக்கூடியது.

house

தெற்கு ஆக்கினேய பாகத்தைத் தாக்கும் தெருத் தாக்கம், இரண்டாவது தலைமுறை வாரிசுகளுக்கு நல்ல சௌகரியத்தையும், மகிழ்ச்சியையும் தரும். இந்த வீட்டில் இருந்து வேறு இடத்தில் கட்டி கொடுக்கும் மகளின் வாழ்வு அற்புதமான வாழ்வாக அமையும். இந்த இடத்தில் எனது பதிவு மனையை பார்த்து வாங்கினால் போதும். மகளுக்கு மணமகனை மனை பார்த்து கொள்ளும்.

தெற்கு நைருதி பாகத்தைத் தாக்கும் தெருத் தாக்கம், ஆண்களின் வாழ்க்கையை தனிமைபடுத்தி தீராத நோயைத் தருவதுடன் பொருளாதார சீர்கேடுகள் மூலமாக அவமானபட வைக்கும். மேற்கு நைருதி பகுதியை தாக்கும் தெருத் தாக்கம், குடும்பத்தில் மூத்த வயதில் உள்ள ஆண்கள் மற்றும் குடும்பத்தில் மூத்த தலைப்பேரன் வாழ்க்கை பயணம் விரையம் நிறைந்த வாழ்வாக வாழ்வார்கள்.

தொழில் மூலமாக பொருளாதார நஷ்டம், வியாபாரத்தில் சரிவு, வேலை இல்லாமல் இருப்பதால் குழப்பம்,பெண்கள் மூலமாக கௌரவம் கெடும் அளவு துன்பங்கள் தரும். வடமேற்கு மேற்கு பாகத்தைத் தாக்கும் தெருத் தாக்கம், வெளியூர் மற்றும் வெளிமாநில தொடர்புகள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் நட்பு வகையில் நல்ல தொழில் அமைந்து வாழ்க்கை அற்புதமான அமைப்பாக இருக்கும்.

ஆனால் வீட்டில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் எப்போதும் நல்ல விசயத்திற்காக வீட்டை விட்டு வெளியில் இருப்பார்கள். அதுவும் ஒருவகையில் நல்லதாகும். வடக்கு வாயுவிய பாகத்தில் தாக்கும் தெருத் தாக்கம் வரவு-செலவுகளில் நஷ்டத்தையும், சண்டை சச்சரவுகளையும், குடும்பத்துக்குள் ஒற்றுமையின்மையையும், சொத்துத் தகராறுகளையும், பெண்கள் மனதில் நிம்மதி குறையும்படியான தன்மைகளையும் தரும்.

கணவன் மனைவி உறவில் குழப்பங்களையும் ஏற்படுத்தும். வாகன விபத்துகளை கொடுத்து உடல் ஊனப்பட வைக்கும். மொத்த மனைபாகத்தையும் தாக்கும் தெருத் தாக்கம், நன்மையே செய்யும் என்று சொன்னாலும் என்னைப் பொறுத்தவரை பாதி தவறான பலன்களையும் பாதி நல்ல பலன்களையும் வழங்கும். ஆனால் அதனை எக்காலகட்டத்தில் வழங்கும் என்று உறுதியாக கூற முடியாது.

நான்கு மனைகளுக்கு இடையில் நான்கு சாலைகள் செல்லும் மனை அமைப்பு என்பது வடகிழக்கு இருபுறங்களிலும் சாலைகள் வரும் மனை மட்டுமே நன்மை அளிக்கும். மற்ற மூன்று மனைகளும் பாதிப்பை மட்டுமே வழங்கும். அதாவது இரு இடத்தை தாக்கும் தெருப்பார்வை, ஒரு மனை இடத்திற்கு நன்மை செய்தால், மற்றொரு மனை இடத்திற்கு தீமையை வழங்கும். ஆக மனை கார்னர் இடத்தில் இருக்கும் போது வாங்க முடிவு செய்தாலோ, வீடு கட்ட முடிவு செய்தாலோ உங்களுக்கு வாஸ்து சார்ந்த அறிவு இருந்தால் அமைத்து கொள்ளுங்கள். அல்லது ஒரு நல்ல அனுபவம் உள்ள வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்து கொள்ளுங்கள்.