‘மனைவி மீது சந்தேகம்’.. மனைவியையும், 9 மாத குழந்தையையும் உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்.. அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் !

 

‘மனைவி மீது சந்தேகம்’.. மனைவியையும், 9 மாத குழந்தையையும் உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்.. அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் !

லிங்க குண்டா என்னும் பகுதியில் கடந்த 3 ஆம் தேதி ஒரு குழந்தையின் உடலும் ஒரு பெண்ணின் உடலும் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்திலுள்ள லிங்க குண்டா என்னும் பகுதியில் கடந்த 3 ஆம் தேதி ஒரு குழந்தையின் உடலும் ஒரு பெண்ணின் உடலும் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதில் பதிவாகியிருந்த காட்சிகளில் சந்தேகத்தின் பேரில் இரு சக்கர வாகனத்தில் கோடீஷ்வர ராவ் என்பவர் சென்றுள்ளார். 

ttn

அந்த நபரை அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அந்த நபர், எரிந்து கிடக்கும் சடலங்கள் என் குழந்தை மற்றும் மனைவி என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையைத் தீவிரப் படுத்தியுள்ளனர். அதில் அவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

tn

கோடீஷ்வர ராவ் அளித்த வாக்குமூலத்தில், “அந்த 9 மாத பெண் குழந்தை என்னுடையது இல்லை. அதனால் மனைவி மீது சந்தேகப்பட்டு என் குழந்தையையும், மனைவியையும் உயிரோடு எரித்துக் கொன்று விட்டேன்” என்று கூறியுள்ளார். கணவனே மனைவியை எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடீஷ்வர ராவிடம் காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.