மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்: கடிதத்தால் வெளிவந்த உண்மை!
மனைவியையும் மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கஜியாபாத்: மனைவியையும் மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தர பிரதேச மாநிலம் கஜியாபாத் மசூரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப். இவருக்கு மனைவி மற்றும் 8 வயது, 5 வயது மற்றும் 3வயது வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர். பிரதீப்பின் மனைவி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
Ghaziabad: A man has committed suicide after murdering his wife and three children at their residence in Masuri. A suicide note has been recovered from the body of the man stating that his wife suspected him so he murdered all of them. pic.twitter.com/BwG02k7Bgv
— ANI UP (@ANINewsUP) July 5, 2019
இந்நிலையில் நேற்று காலை பிரதீப்பின் உறவினர் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பிரதீப் உட்பட 5 பேர் இறந்த நிலையிலும் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பிரதீப்பின் வீட்டிலிருந்து கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில், என் மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தால், அனைவர்க்கும் முதலில் விஷத்தை கொடுத்துவிட்டு பின்னர் டேப்பை சுற்றி கொலை செய்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மனைவியின் மீதான சந்தேகத்தால் மொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.