மனைவி மயங்கி விட்டதாக நாடகம் ஆடிய கணவன்.. கழுத்தை நெரித்து கொலை செய்தது உடற்கூறு ஆய்வில் அம்பலம்!

 

மனைவி மயங்கி விட்டதாக நாடகம் ஆடிய கணவன்.. கழுத்தை நெரித்து கொலை செய்தது உடற்கூறு ஆய்வில் அம்பலம்!

இவரது வேனில் தினமும் ஆர்த்தி என்ற பெண் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்படியே இவர்கள் இரண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணன் கோட்டை பகுதியைச் சேர்ந்த வாசு, வேன் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது வேனில் தினமும் ஆர்த்தி என்ற பெண் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்படியே இவர்கள் இரண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. அதனையடுத்து, இவர்கள் இரண்டு பேரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகியுள்ளது. திருமணம் ஆன சில நாட்களிலேயே வாசு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டாராம். 

ttn

இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன் தினம் வழக்கம் போல வீட்டுக்குக் குடித்து விட்டு வாசு சென்றதால் இவர்களுக்கிடையே மீண்டும் சண்டை வந்துள்ளது. அப்போது குடி போதையிலிருந்த வாசு, ஆர்த்தியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். உடனே ஆர்த்தியை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று உடல் நலக் குறைவால் அவர் மயங்கி விழுந்து விட்டதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆர்த்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறி, அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

ttn

அந்த அறிக்கையில் ஆர்த்தி கழுத்தை நெறித்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து உடனே போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற வாசுவை கைது செய்தனர்.இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.