மனைவி பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு சென்ற கேப்பில் “2 ஆவது திருமணம்” செய்து கொண்ட கணவன்.. ஊரடங்கால் நடந்த கொடுமை!

 

மனைவி பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு சென்ற கேப்பில் “2 ஆவது திருமணம்” செய்து கொண்ட கணவன்.. ஊரடங்கால் நடந்த கொடுமை!

ஒருவர் மனைவி பிரசவத்துக்கு சென்ற நேரத்தில் 2 ஆவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். வெளியூர் சென்றவர்களெல்லாம் அந்தந்த ஊர்களிலேயே சிக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஒருவர் மனைவி பிரசவத்துக்கு சென்ற நேரத்தில் 2 ஆவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

பீகார் மாநிலம், பாலிகஞ்ச் மாவட்டம் பரத்புரா பகுதியை சேர்ந்தவர் தீரஜ் குமார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில், இவரது மனைவி கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு சென்ற அவர், லாக் டவுனால் திரும்பி வர முடியாமல் அங்கேயே இருந்துள்ளார். தீரஜ் குமார் அவருக்கு கால் செய்து அழைத்தும், அவரால் திரும்பி வர முடியாத சூழல் இருந்துள்ளது. 

அதனால் கோபமான தீரஜ், அவரது முன்னாள் காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் தீரஜ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.