மனைவி துணி மாற்றுவதை படம் பிடித்த நபர்; போலீசில் புகார் கொடுத்த கணவருக்கு நேர்ந்த கதி!

 

மனைவி துணி மாற்றுவதை படம் பிடித்த நபர்; போலீசில் புகார் கொடுத்த கணவருக்கு நேர்ந்த கதி!

மனைவி துணி மாற்றுவதை அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர் சுபாஷ், அவரது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

கோவை கண்ணப்பன் நகரில் வசித்துவரும் மணிகண்டன். இவரின் மனைவியும்  இவரும் எருக்கம்பனி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடிக்கும் வேலை செய்து வருகின்றனர். அங்கு சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கிலுள்ள அறையில் மணிகண்டனின் மனைவி துணி மாற்றுவதை அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர் சுபாஷ், அவரது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

ttn

இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டன் மேலாளரிடம் கூறிய அவர் சாய் பாபா காலனி போலீசாரிடம் செல்போன் ஆதாரத்துடன் புகார் அளித்தார். செல்போனை உடைத்த போலீசார், இனி பிரச்னை இல்லை என்று கூறி அவரை அனுப்பியுள்ளனர்.  இதன்பின்பு சுபாஷை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். 

ttn

இந்நிலையில், மணிகண்டன் பெட்ரோல் திருடியதாகக் கூறி, மேலாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட சிலர் அவரை அடித்து இடுப்பெலும்பை உடைத்துள்ளனர்.  இதுகுறித்து கூறியுள்ள மணிகண்டன் சுபாஷை வேலையைவிட்டு நீக்கியது போலவே என்னையும் நீக்கவேண்டும் என்று திட்டமிட்டு இப்படி செய்துள்ளார்கள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.