மனைவியை 300 துண்டுகளாக வெட்டி 22 டிபன் பாக்ஸில் அடைத்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை!

 

மனைவியை 300 துண்டுகளாக வெட்டி 22  டிபன் பாக்ஸில் அடைத்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை!

அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கத்தரிக்கோல், கத்தி உள்ளிட்ட  உபகரணங்களைப் பயன்படுத்தியுள்ளார். 

இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற மருத்துவர் சோம்நாத் பரிதா. இவரது மனைவி உஷாஸ்ரீ சமலை.  ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் வசித்து வந்த சோம்நாத்  தனது மனைவியை இவர் கடந்த 2013ம்ஆண்டு கொலை செய்தார். பின்னர் கொலையை மறைப்பதாக மனைவியின் உடலை சுமார்  300 துண்டுகளாக நறுக்கி 22 சின்ன டிபன் பாக்ஸில் அடைத்து வைத்து அதிலிருந்து துர்நாற்றம் வராமல் இருக்க பினாயிலை ஊற்றி வைத்துள்ளார். மனைவியை கொலை செய்ய அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கத்தரிக்கோல், கத்தி உள்ளிட்ட  உபகரணங்களைப் பயன்படுத்தியுள்ளார். 

ttn

இதையடுத்து வெளிநாட்டிலிருந்த இவர்களின் பிள்ளைகள் அம்மாவை தொடர்பு கொள்ளமுடியவில்லை என   உஷாஸ்ரீ சமலையின் சகோதரர் ரஞ்சனுக்கு  தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அவர்  வீட்டிற்கு சென்று பார்க்கும் போது  தான்,  உஷாஸ்ரீ சமலை கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சோம்நாத் பரிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர். 

ttn

 குர்தா மாவட்ட நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 78 வயதான பரிதாவிற்கு கொலை மற்றும் ஆதாரத்தை அழித்தது உள்ளிட்ட குற்றச்செயலுக்காக ஆயுள்தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.