மனைவியை சரமாரியாக தாக்கிய கணவன்..லூடோ கேமால் நேர்ந்த கொடுமை!

 

மனைவியை சரமாரியாக தாக்கிய கணவன்..லூடோ கேமால் நேர்ந்த கொடுமை!

ஊரடங்கால் குடும்ப சண்டைகள் அதிகரித்து வரும் நிலையில், குஜராத்தில் லூடோவால் சண்டை நடந்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு வரும் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்கள் லூடோ, தாயம், ஆன்லைன் கேம், பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். குறிப்பாக லூடோ விளையாட்டு மக்களிடையே பிரபலமாகியுள்ளது. ஊரடங்கால் குடும்ப சண்டைகள் அதிகரித்து வரும் நிலையில், குஜராத்தில் லூடோவால் சண்டை நடந்துள்ளது. 

ttn

குஜராத்தின் வதோதரா பகுதியில் வசித்து வந்த நபர் ஊரடங்கை கழிப்பதற்காக, தனது வீட்டின் அருகே இருக்கும் நண்பர்களை சந்தித்த வண்ணம் இருந்துள்ளார். ஆனால், அவரது மனைவிக்கு பொழுது போகாததால், கணவரிடம் லூடோ கிங் விளையாடலாம் என்று கூறியுள்ளார். அதற்கு கணவன் ஒப்புக் கொண்ட நிலையில், இரண்டு பேரும் லூடோ விளையாடி வந்துள்ளனர். 

ttn

முதல் மூன்று ஆட்டங்களிலும் மனைவியே ஜெயித்ததால் கணவன், கடும் கோபம் அடைந்துள்ளார். கோபத்தின் உச்ச கட்டத்துக்கு சென்ற அவர், மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த நபருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.