மனைவியை சந்தேகித்த கணவன்! துபாய் வரை சென்று கொன்ற கொடூரம்

 

மனைவியை சந்தேகித்த கணவன்! துபாய் வரை சென்று கொன்ற கொடூரம்

44 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவர் தன் மனைவியைக் காண துபாய்க்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளார். அங்கு சென்றவருக்கு மனைவி கள்ளத்தொடர்பில் இருக்கிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.

44 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவர் தன் மனைவியைக் காண துபாய்க்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளார். அங்கு சென்றவருக்கு மனைவி கள்ளத்தொடர்பில் இருக்கிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.

uae

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட முக்கியமான நகரத்தில், பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்திய நபர் தன் மனைவி வேலை செய்யும் இடத்திற்கு அவரைக் காணச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மேலாளருக்கு முன் தன் மனைவியை அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

uae

பார்க்கிங்கில் பெண்ணின் உடலைப் பார்த்த டிரைவர் ஒருவர் போலீசிற்கு தகவல் அளித்துள்ளார். போலீஸ் வந்து பார்த்த பொழுது “அந்தப் பெண் வாகன நிறுத்துமிடத்தில் கார்களுக்கிடையில் இறந்த  நிலையில் கிடந்திருக்கிறார். அவளது அடிவயிற்றிலும் இடது தொடையிலும் ஆழமான குத்துக் காயங்கள் இருந்தன.  உடலிற்கு அருகே கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் கிடந்துள்ளது.  பின்பு கொலை செய்த இந்திய நபர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்